August 27, 2010
ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
சென்னை : பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்...
திருவள்ளுவர் மாவட்டம் கசுவா கிராமத்தில் ஒரு பள்ளி உள்ளது. தனியார் டிரஸ்ட் கீழ் இந்த பள்ளி இயங்குகிறது. மாணவர்களுக்கு விடுதியுடன் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாகவும், மாணவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன. தற்போது அந்த பள்ளி மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
பாதிக்கப்பட்ட மாணவி நிருபர்களிடம் கூறியதாவது: 8ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்து வந்தேன். 2007ம் ஆண்டு 9ம் வகுப்பில் இந்த பள்ளியில் சேர்ந்தேன். ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர், அறைகளை சுத்தம் செய்ய சொன்னார். துடைப்பம் எடுக்க லேப்புக்கு சென்றபோது என் பின்னால் வந்து கட்டிப்பிடித்தார். அதிர்ச்சியடைந்த நான் தோழி ரம்யாவிடம் (பெயர் மாற்றம்) கூறினேன். அவளுடன் சேர்ந்து துடைப்பம் எடுக்க லேப்புக்கு மீண்டும் சென்றேன். என்னிடம் பாலியல் தொந்தரவு செய்தார். என் தோழியும் இதை பார்த்து அதிர்ந்தார். இனி படிக்க முடியாத அளவுக்கு செய்து விடுவேன் என எங்களை மிரட்டினார்.
இதுபற்றி பெண் நூலகரிடம் கூறினேன். அவருடைய கணவர் வழக்கறிஞர் என்பதால் அவரிடம் தெரிவித்தேன். அவரும் இது தொடர்பாக வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். விஷயம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து விட்டது. எந்த சம்பவமும் நடக்கவில்லை என எழுதி கொடுக்க வற்புறுத்தி 2 மணி நேரம் தனியறையில் வைத்து மிரட்டினர். நான் எழுதி கொடுத்து விட்டேன்.
இதுபோன்ற சம்பவம் இனியும் மற்ற மாணவிகளுக்கு நடக்கக் கூடாது என்று தைரியமாக என் தாயார் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தேன். அதற்கு முன்பு திருவள்ளூவர் மாவட்ட கலெக்டரிடம் மனுக் கொடுத்தேன். இந்திய குழந்தைகள் நல ஆணையத்திலும் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு மாணவி கூறினார். பேட்டியின்போது, வக்கீல் ஸ்ரீதர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
No comments:
Post a Comment