குடிபோதையில் கார், பைக் ஓட்டுவதை தடுக்க, புதிய கருவியை கோவை இன்ஜினியர் தயாரித்துள்ளார். வண்டியில் இதை பொருத்தி விட்டால், போதையில் இருப்பவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்தால், ஸ்டார்ட் ஆகாது.
கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(27). பி.இ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர். 2004ம் ஆண்டில், இவர் ‘ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர்‘ என்ற கருவியை உருவாக்கினார்.
இதற்கு போபாலிலுள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் என்ற அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது. வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே வந்தால், இந்த கருவி சத்தமிடுவதுடன் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும். இதனால், திருட்டை தவிர்க்கலாம். இதேபோல் பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது, ‘டிரங்கன் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம்‘ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இக்கருவியை பைக், கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில் பொருத்தலாம். கருவி சீல் வைக்கப்பட்டிருக்கும்.
டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன், கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார் தானாக செயல்படும். டிரைவர் குடித்திருந்தால் ‘மன்னிச்சிடுங்க பாஸ்... நீங்க மது குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்ட முடியாது‘ என்று எச்சரிக்கை வரும். மது குடிக்காவிட்டால், டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும். அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும். அத்துடன் ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும். வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தாலும், 30 வினாடியில் கண்டுபிடித்து வண்டி நின்று விடும். ‘மத்திய, மாநில அரசுகள், வாகன உற்பத்தியாளர்கள் உதவினால், இந்தக் கருவியை எல்லா வாகனங்களிலும் பொருத்தி, விபத்துகளை தடுக்கலாம்‘ என்கிறார் முத்துக்குமார்.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment