பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி முகாமை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய மீன் அபிவிருத்தி வாரியம் நிதி உதவியுடன் கடல் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வணிகம் குறித்த பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. புல முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்று பயிற்சி திட்டத்தின் விளக்கத்தையும், பயனையும் எடுத்துக் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் முகாமை துவக்கி வைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். முகாமின் நோக்கம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் விளக்கினார். ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய இயக் குனர் தேவராஜ், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாமன்ற உறுப்பினர் செயலாளர் வின்சென்ட் பேசினர். இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த 25 பயனாளிகள் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- நஷ்டவாளர்கள் யார்?
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள தம்மாம் ஷாபிங் செண்டர்!
No comments:
Post a Comment