Islamic Widget

August 15, 2010

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்வழி கற்றல் கலந்துரையாடல்


பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராம கல்விக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் நரசிம்மன் தலைமையில் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், பேரூராட்சி தலைவருமான முகமது யூனுஸ் பேசினார். இயற்பியல் ஆசிரியர் நமச்சிவாயம் முன்னிலையில் ஒளிவிலகல் நிகழ்ச்சியை செயல்வழி கற்றல் மூலம் மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
வேதியியல் ஆசிரியர் பூங்கோதை முன்னிலையில் அமிலங்கள், காரங்கள் பற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது. பொது அறிவு வினா, விடை போட்டி, ஓவியக் கண்காட்சி, செய்தித்தாள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செயல்வழி கற்றல் குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பாஸ்கர் விவாதித்தார். துணைத் தலைவர் தங்கவேலு, ஆசிரியர்கள் பானுமதி, பாவாடை சாமி, தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source: Dinakaran

No comments:

Post a Comment