Islamic Widget

August 15, 2010

கடலூரில் கடல்நீர் உள்வாங்கியது


கடலூர் : கடலூரில் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியது.
சுனாமி நிகழ்விற்கு பின், கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் நீர் அடிக்கடி ஊருக்குள் புகுவதும், உள்வாங்குவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், தாழங்குடா, உட்பட பல கடற்கரையோர கிராமங்களில் நேற்று மாலை கடல்நீர் 50 மீட்டர் தூரத்திற்கு திடீரென உள்வாங்கியது.
கடல் நீர் உள்வாங்கியதால் கடலூர் சில்வர் பீச்சிற்கு வந்திருந்த மக்கள் அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

Source: Dinamalar

No comments:

Post a Comment