கோவை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 1600க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு முழம் மல்லிகைப் பூ ரூ. 50க்கு விற்கப்பட்டது. கோவை சந்தையில் அதிகபட்ச மொத்த விலையாக ரூ. 1600 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 1000க்கும் மல்லிகைப்பூ ஏலம் போனது.
மல்லிகையைத் தொடர்ந்து பட்டுப்பூ, முல்லைப்பூ, ஜாதி மல்லி,செண்டு மல்லி, சம்பங்கி, அரளிப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 700 - ரூ.800 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று முதல் அதிகபட்சம் கிலோ ரூ. 1600க்கு ஏலம் போனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகை விலை ரூ. 300க்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
பனிப் பொழிவு அதிகமாக இருப்பால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்று மல்லிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:.inneram
December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
- பிறை கருத்தரங்கம்
No comments:
Post a Comment