கடலூர்: போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடலூரில் நாளை நடக்கிறது.இதுகுறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் போலீஸ் இரண் டாம் நிலை (ஆண், பெண்), சிறைக் காவலர் (ஆண், பெண்), தீயணைப்பு படை வீரர் பணிக்கு எழுத்துத் தேர்வு நாளை (8ம் தேதி) நடக்கிறது. விண்ணப்பித்துள்ள 7,097 பேருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு நடக்கிறது.அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர் கள் தக்க சான்றுகளுடன் கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அழைப்புக் கடிதம் பெற்றுக் கொள் ளலாம்.தேர்வு எழுத வருபவர்கள் 8ம் தேதி காலை 9 மணிக்குள் தங்களுக்குரிய தேர்வு மையத்திற்கு வர வேண்டும். மொபைல் போன், கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment