நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் விவசாயம், தொழில்களை மேம்படுத்த தேவையான நடவ டிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் பிரதமர் ஆர்வமாக உள்ளார். ஹார் டுவேர், சார்ப்ட்வேர் துறையில் நன்கு வளர்ச்சி கண்டு வருகிறோம். அமைதியான புதுவையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக தேவையான மின்உற்பத்தி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. தொழில் நுட்பத்திலும் புதுவை வளர்ச்சி கண்டுள்ளது. இன்னும் 2 மாதங் களில் புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடகும் என்றார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய 5 மாநிலங்களிலிருந்து 60 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Source: Dinakaran
No comments:
Post a Comment