July 22, 2010
பொதுமக்களை அச்சுறுத்திய விஷவண்டுகள் அழிப்பு
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொதுமக் களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பால்வாதுண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் வீட்டு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தது. அதிலிருந்து வெளியேறிய வண்டுகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை விரட்டி வந்தது. இதனால் அந்த பக்கம் செல்லவே மக்கள் பயந்து வந்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று தீயணைப்பு நிலைய அலுவலர் அஞ்சுவராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் ராமலிங்கம், செல்வம், ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment