Islamic Widget

July 22, 2010

பொதுமக்களை அச்சுறுத்திய விஷவண்டுகள் அழிப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொதுமக் களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பால்வாதுண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் வீட்டு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தது. அதிலிருந்து வெளியேறிய வண்டுகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை விரட்டி வந்தது. இதனால் அந்த பக்கம் செல்லவே மக்கள் பயந்து வந்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று தீயணைப்பு நிலைய அலுவலர் அஞ்சுவராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் ராமலிங்கம், செல்வம், ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.

No comments:

Post a Comment