Islamic Widget

July 22, 2010

சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு


மும்பை, ஜூலை.22: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்து 18,113 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 5,441 புள்ளிகளில் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மஹிந்த்ரா அன் மஹிந்த்ரா, பார்தி ஏர்டெல், ஜெய்ப்ரகாஷ் அசோ, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் ஸ்டீல், சிப்லா, எல் அன் டி, ஹீரோ ஹோண்டா, பிஎச்ஈஎல், டிசிஎஸ், ஹீரோ ஹோண்டா, விப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
ஏசிசி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, மாருதி சுஸுகி, டாடா பவர், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

No comments:

Post a Comment