Islamic Widget

May 12, 2016

14ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (12-05-16): இன்னும் இரண்டு நாட்களில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது. 
இன்னும் இரண்டு நாட்களில் அதாவது வரும் 14ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இது இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment