Islamic Widget

May 12, 2016

கேரளாவில் மோடியின் கருத்தால் சர்ச்சை!


கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்ட இந்தியப் பிரதமரின் கருத்தை அம்மாநில முதல்வர் கண்டித்துள்ளார்.
கேரளாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மத்தியில் குழந்தை இறப்பு விகிதம் சோமாலியாவில் இருப்பதைவிட அதிகம் என்று குறிப்பிட்டார்.
சோமாலியா நாட்டுடன் கேரள மாநிலத்தை ஒப்பிட்டது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமரின் கருத்துக்கள் ஆதாரமற்றவை என மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கோரி, பிரதமருக்கு உம்மன் சாண்டி கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மோடியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கேரளாவில் மே 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரள மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சி கால் ஊன்றுவதற்குத் தீவிரமாக முயற்சித்துவருகிறது. ஆனால்,மோடியின் சமீபத்திய பிரச்சாரம் இதற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment