Islamic Widget

February 21, 2016

கோத்ரா ரயில் எரிப்பு பாஜகவின் திட்டமிட்ட சதி: அதிர்ச்சி தகவல்!

குஜராத்: 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பாரதீய ஜனதா கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என பட்டேல் சமூகத் தலைவர் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். 

"குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதீய ஜனதாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். முஸ்லிம்களால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பீதியினை இந்துக்களிடையே பரப்புவதன் மூலம் ஓட்டு வேட்டையாடுவதே பாஜகவின் திட்டம். இப்போதும் குஜராத்தில் அத்தகைய பயம் இந்துக்களிடையே உண்டு. ஆனால், கலவரங்களை உருவாக்குவதும் தாக்குதல் நடத்துவதும் பாரதீய ஜனதா கட்சி செய்யும் திட்டமிட்ட வேலைகள்.
கோத்ரா ரயிலை எரித்தவர்கள் முஸ்லிம்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது பாரதீய ஜனதா கட்சியினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்துக்கள் ஒன்றாக நிற்கவில்லையேல் முஸ்லிம்கள் தங்களைக் கொல்வர் என்ற பீதியினை இந்துக்களிடையே உருவாக்குவதற்காகவே கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிடப்பட்டது.
முஸ்லிம்களைப் பயமுறுத்தி ஆட்சியினைத் தக்க வைக்கும் சித்தாந்தத்தையே பல ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது" என்று பட்டேல் சமூகப் போராட்ட தலைவர் ராகுல் தேசாயி ஒரு இணையதள ஊடகத்துக்குப் பேட்டி வழங்கியுள்ளதாக மாத்யமம் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment