Islamic Widget

January 06, 2012

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் அதிரடி நீக்கம்!


கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சேலம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இரண்டு பேரை முதல் அமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்அமைச்சருமான ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
"கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் சேலம் மாவட்ட முன்னாள் செயலாளர் வெங்கடாச்சலம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் கே.சி.செல்வராஜ் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் யாரும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்."
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment