Islamic Widget

January 11, 2012

ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்



ஈரான் – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடை யே போரொன்று வெடிப்பதற்கான மேகங்கள் நாற்புற மும் குவிந்து கொண்டிருப்பதாக சற்று முன்னர் டேனி ஸ் படைத்துறை ஆய்வாளர் லாஸ் எஸ்லேவ் ஆனர்ச ன் தெரிவித்தார். அமெரிக்க மரைன் படைப்பிரிவில் ப  ணியாற்றிய 28 வயதுடைய ஈரானியரை அமெரிக்காவி ன் சி.ஐ.ஏ உளவாளி என்று குற்றம் 
சுமத்தி ஈரான் கொன்றுள்ளது. இந்த நபர் இரண்டு நாட்டு குடியுரிமையை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தண்டனை இரு நாடுகளின் நல்லுறவை மேலும் மோசமாகப் பாதித்துள்ளது. தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்க வந்தவேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களுக்கு முன்னரே இவர் கைதானாலும் டிசம்பர் மாதமே கைது செய்யப்பட்டதாக ஈரான் அறிவித்தது. தனது நாட்டு குடியுரிமை உள்ளவரை உடன் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டும் ஈரான் மறுத்துவிட்டது. இந்த மரண தண்டனை இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான உடைவை வெளிக் காட்டியுள்ளது. 01. பிரிட்டன் தூதராலயம் ஈரானில் தாக்கப்பட்டது 02. ஈரான் யுரேனிய பிரிப்பை முடித்தது 03. ஓயில் ஏற்றும் பாரசீகக் குடா நீரிணையை தடுக்க முயல்வது 04. அமெரிக்க உளவாளி படுகொலை ஆகிய நான்கு விடயங்கள் நிலமையை மோசமாக்கியுள்ளன. ஆனால் ஈரான் இராணுவ ரீதியாக பலமிக்க நாடு, எனவே மேலை நாடுகள் விமானம் மூலமான தாக்குதல்களையே நடாத்தும். அதேவேளை அருகில் உள்ள நாடுகளின் படைகளை உள் இறக்க முயற்சிக்கும். சவுதிக்கு அமெரிக்க பெருந்தொகையான யுத்த விமானங்களை வழங்க உடன்பட்டுவிட்டமை கவனிக்கத்தக்கது. ஈரானுடன் போரை ஆரம்பித்தால் அது முடிவடைய மிக நீண்ட காலம் ஆரம்பிக்கும், ஆகவே மேலை நாடுகள் அறிவு பூர்வமாக நடக்க வேண்டுமென பலர் ஆலோசனை கூறியுள்ளனர். மேலை நாடுகள் இந்தப் போரில் சிக்குப்பட்டால் அதுதான் தாயமென சீனா, ரஸ்யா இரண்டும் உலகின் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துவிட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment