Islamic Widget

January 01, 2012

இலவச சார்ஜ்" சஞ்சிவீராயர் தெரு முனை!


பரங்கிப்பேட்டை: தானே புயல் தாக்கியதின் சேதத்தினால் இன்று 3-வது நாளாக மின்விநியோகம் முற்றிலுமாய் பாதிக்கப்பட்டு பரங்கிப்பேட்டை இருளில் மூழ்கியிருக்கிறது. இதற்கிடையில் அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய வங்கிகள் சேவை முடங்காமல் இருப்பதற்காக வேண்டி, படுஜோராக மின்வாரியம் செயற்பட்டதை தொடாந்து சஞ்சிவீராயர் தெரு பகுதியில் நேற்'று இரவு முதல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.


அங்கு திறந்திருக்கும் சில கடைகளில் பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களi சார்ஜ் ஏற்றி செல்கின்றனர். முக்கியமாக இந்த இலவச சேவையை ஹசன்பாய் ஹல்வாக் கடை, ஜெனிஃபாஹ் கம்ப்யூட்டர்ஸ், யாசின் மெடிக்கல்ஸ், ஆர்.சி.எஸ். மொபைல்ஸ் உள்ளிட்ட இன்னும் சில கடைகளில் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

நன்றி:mypno

No comments:

Post a Comment