Islamic Widget

October 27, 2011

சிதம்பரத்தில் பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது, தீபாவளி பண்டிகை கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சிதம்பரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகல் இடைவிடாது அடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரத்தில் இந்திரா நகர், அண்ணாமலைநகர்,
முத்தையா நகர், மாரியப்பா நகர், அம்மாபேட்டை, சாந்தி நகர், சிவதி நகர், நேரு நகர், ராஜா நகர், ஞானம் நகர், எம்.கே., தோட்டம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட கூட முடியாத நிலை ஏற்பட்டது. நோன்பு பொருட்கள் வாங்க குடை பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிதம்பரம் மற்றும் சுற்று புற கிராம பகுதிகளில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

No comments:

Post a Comment