Islamic Widget

October 12, 2011

துபாய்: கடத்தல் வன்புணர்வு வழக்கில் 2 இந்தியருக்கு மரணதண்டனை


ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 2 இந்தியர்களை கடத்தியதாகவும், அவர்களை கத்தியால் குத்தியதாகவும், வன்புணர்ந்ததாகவும்12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத்  தொடரப்பட்டது.
இந்த வழக்கில் முன்பு  கீழ்நிலை நீதிமன்றம் ஒரு இந்தியருக்கு மரணதண்டனையும், மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து துபாய்  மேல்முறையீட்டு மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனுவை விசாரித்த முறையீட்டுமன்றம் கீழ்நிலை நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 2 இந்தியர்களுக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் 30 வயதிற்குட்பட்ட வாலிபர்களாவர்.

No comments:

Post a Comment