Islamic Widget

March 30, 2011

பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!


பரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி சார்பில் இதன் தேர்தல் அலுவலகம் பெரியத் தெருவில் இன்று திறக்கப்பட்டது. வேட்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிதம்பரத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை த.மு.மு.க.வின் கவுரத் தலைவர் டாக்டர் நூர்முஹம்மது பங்கு பெற்றார்.கூட்டணி கட்சிகள் சார்பில், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டர். அருண்மொழித்தேவன் உரையாற்றினார்.



நன்றி: mypno

No comments:

Post a Comment