சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய சேர்மன்கள் பார்வையிட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சிதம்பரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
பாதிக்கப்பட்ட தில்லைக்காளி கோவில் பகுதி, வாகீசன் நகர், கோவிந்தசாமி நகர், அண்ணா தெரு, பொன்னம்பலம் நகர் பகுதிகளை பார்வையிட்ட கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்தார். பரங்கிப்பேட்டை: பு.முட்லூர், தச்சுக்காடு, சேந்திரக்கிள்ளை, பெரியகுமட்டி, சின்னகுமட்டி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிகளை சேர்மன் முத்துபெருமாள் பார்வையிட்டார்.
ஒன்றிய ஆணையர் சந்தர், சிறப்பு தாசில்தார் கோவிந்த், வி.ஏ.ஓ., கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். குறிஞ்சிப்பாடி: வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கல்குணம், பூதம்பாடி, ஓணாக்குப்பம், மருவாய், அயன் குறிஞ்சிப்பாடி, திருவெண்ணைநல்லூர் கிராமம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க., சார்பில் கடந்த நான்கு நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 42 ஆயிரத்து 52 உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
Source:dinamalar
December 03, 2010
சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் சேர்மன்கள் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 94-வது ஆண்டு விழா
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment