Islamic Widget

December 07, 2010

அதிகாரிகள் பார்வையிடாததால் மீனவ கிராம மக்கள் அதிருப்தி

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே  முடசல்ஓடை மீனவ கிராமங்களை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  கடந்த 4ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர், டி.ஆர்.ஓ.,  உள்ளிட்ட அதிகாரிகள் பார்øயிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆனால் முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை மற்றும் பில்லுமேடு கிராமங்கள் கடற்கரையோரம் உள்ள பகுதிகளை பார்வையிடவில்லை. மேலும் அரசின் சிறப்பு அதிகாரியாக பார்வையிட வந்த ககன்தீப் சிங் பேடியும் தங்கள் பகுதியை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.

Source:dinamalar

No comments:

Post a Comment