Islamic Widget

November 24, 2010

பரங்கிப்பேட்டையில் மீண்டும் மீண்டும் மழை

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழையின் ஆதிக்கத்திற்குட்பட்டு வந்த நிலையில் வட மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் மழை இல்லாமலே இருந்து வந்தது, இந்நிலையில் அவ்வப்போது பெய்து வந்த மழை மீண்டும் நள்ளிரவு முதல் தொடங்கியது தொடர்ந்து இன்று காலையிலும் பெய்து வருகின்றது.






மழையின் காரணமாக பரங்கிப்பேட்டையிலுள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன. மேலும் காஜியார் தெருவில் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் இம்மழையின் வருகை அப்பணியினை பின்னுக்கு தள்ளி இருக்கின்றது.


இதற்கிடையில் தமிழக அரசு நமது கடலூர் மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


நன்றி mypno

No comments:

Post a Comment