Islamic Widget

November 04, 2010

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்


பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தர் தலைமை தாங்கினார்.


ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், கலியமூர்த்தி, சமூக நல அலுவலர் அம்பிகா, ஊர்நல அலுவலர்கள் சுதந்திரம், சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment