உரிப்பவரைக் கண்ணீர் விடவைக்கும் வெங்காயம் இனி அதன் விலையைக் கேட்பவருக்கும் கண்ணில் நீர் சுரக்கவைக்கும் விதமாக மளமளவென்று விலையேறி வருகிறது.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலும், மராட்டியத்தின் நாசிக் பகுதியிலும் தான் வெங்காயம் அதிகம் விளைகிறது.
பெங்களூர், பகல்கோட், பிஜப்பூர், தால்வாட், கடாக், சித்ரதுர்கா, தேவாங்கர், கடாக் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்தது. ஆனால், அண்மையில் கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக
வெங்காயம் விலை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த மாதம் வரை கிலோ ரூ.பதினைந்து என்று விற்ற வெங்காயம் தற்போது ரூ.30 ஆகி, பின் ரூ. 40 என்று விற்றுவருகிறது.இன்னும் விலை அதிகரித்து ரூ.60 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கர்நாடகா காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.
அண்மை மழையால் வெங்காயப் பயிர்களில் தண்ணீர் தேங்கி பெருமளவு பயிர்கள் நாசமாகிவிட்டன. விளைந்து இருந்த வெங்காயமும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.60 வரை உயரலாம் என பெங்களூர் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பெங்களூர் மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் டன் வெங்காயம் விற்பனைக்கு வரும் தற்போது இது 2500 டன்னாக குறைந்துவிட்டது. பிஜப்பூரில் இருந்து தினமும் 3 ஆயிரம் டன் விற்பனைக்கு வரும். தற்போது 1000 டன்னாக குறைந்துவிட்டது.
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியிலும் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. ஆனால், அங்கு உற்பத்தியாகும் வெங்காயம் ஜனவரி மாதம்தான் சந்தைக்கு வரும். எனவே ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு வெங்காயம் விலை குறையலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:inneram
November 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:

No comments:
Post a Comment