சிதம்பரம் : கடலூர் மற்றும் சிதம் பரத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா நாளை (16ம் தேதி) நடக்கிறது. கடலூர் மற்றும் சிதம் பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.
சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல் லூரி எதிரில் 68 லட்சம் ரூபாய் செலவிலும், கடலூர் அடுத்த கேப்பர் மலையில் 5 ஏக்கரில் 1.37 கோடி ரூபாய் செலவிலும் புதிய கட்டடங்கள் கட் டப்பட்டன. இவ்வலுவலக கட்டடங்கள் திறப்பு விழா நாளை (16ம் தேதி) கடலூரில் மாலை 3 மணிக்கும் இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சிதம்பரத்திலும் நடக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமையில் புதிய கட்டடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆணையர் ராசாராம், கலெக்டர் சீத்தாராமன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். புதிய அலுவலகம் திறப்பு விழாவையொட்டி பழைய அலுவலகத்தில் இருந்து பொருட்கள் மற்றும் தஸ்தாவேஜிகள் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
Source:dinamalar
November 15, 2010
கடலூர், சிதம்பரத்தில் புதிய ஆர்.டி.ஓ., அலுவலகம் திறப்பு: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
No comments:
Post a Comment