October 17, 2010
அயோத்தி தீர்ப்பு: நிர்மோஹி அகாராவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் முடிவுசெய்திருப்பதைத் தொடர்ந்து நிர்மோஹி அகாராவும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் முடிவுசெய்திருப்பதால் இப்போதைக்கு உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என நிர்மோஹி அகாராவின் செய்தித்தொடர்பாளர் மஹந்த் ராம் தாஸ் தெரிவித்தார்.
முஸ்லீம்களிடையே ஒரு குறிப்பிட்ட குழு அயோத்தி விவகாரத்தை முடித்துவிட ஆர்வப்படவில்லை என சந்தேகம் இருந்தது. அதுதான் இப்போது நடந்துள்ளது. அதே பாணியில் நாங்களும் முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் சார்பில் பேசிய மஹந்த் ராம் தாஸ் தெரிவித்தார்.
dinamani
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment