பரங்கிப்பேட்டை : பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க சாலையின் நடுவில் 'சென்டர் மீடியா' அமைக்க வேண்டும்.
பு.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு வெள்ளாற்று பாலம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது. இவ்வழியாக இதுவரை போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
பு.முட்லூரில் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் சாலையை பிரிக்கும் வகையில் 'சென்டர் மீடியா' அமைக்காததால் கடலூர், புவனகிரி மற்றும் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த நான்கு மாதங்களில் பு.முட்லூர் புறவழிச்சாலை பிரியும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பு.முட்லூர் புறவழிச் சாலை சாலை துவங்கும் இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய 'சென்டர் மீடியா' அமைக்க வேண்டும்.
Source: Dinamalar
October 21, 2010
பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து; 'சென்டர் மீடியா' அமைக்கப்படுமா?
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இறப்பு செய்தி
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- பரங்கிப்பேட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- ஜெயிக்கப் போவது யாரு????
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
No comments:
Post a Comment