கிள்ளை : சிதம்பரம் அருகே நவாப் பேட்டை வெள் ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் 92 லட் சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப் பணை அமைக்கும் பணி துவங்கியது. நவாப்பேட்டை அருகில் உப்பனாற்றுப் பகுதியில் மண் அரிப்பு ஏற் பட்டு ரயில் சாலை வரை பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தது.
ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு இப்பகுதியில் தடுப் பணைக் கட்டா விட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தற் காலிக தடுப்பு அமைக்க திட்ட மதிப் பீடு அனுப்புமாறு அறிவுறுத் தப்பட்டது. இது குறித்து கலெக் டர் சீத் தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் உள் ளிட்ட அதிகாரிகள் நேரில் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
அதனைத் தொடர்ந்து 92 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணைக் கட்ட திட்டமிட்டனர். தற்போது 40 அடி ஆழம் உள்ள வெள்ளாற்றில் 600 மீட்டர் தொலைவில் பனைமரத்தை நட்டு மண் மூட்டை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக் கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து 6 ஆயிரம் பனைமரம் வாங்கி கிள்ளை ரயில் நிலையத் தில் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி மழைகாலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
No comments:
Post a Comment