சிதம்பரம் : சான்றிதழ் சரிபார்க் கப்பட்ட 853 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக்கோரி தமிழ்நாடு வேலையில்லா உடற் கல்வி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ராமசாமி முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் பல் வேறு வளர்ச்சித் திட்டங் கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது.
மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையில்
செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமணம் செய்யப்பட்ட நிலையில், மிக குறைந்த அதாவது 853 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இசை, ஓவியம், தையல் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
பிற பாடங்களில் தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் உடற்கல்வி குறித்து வெளியிடப்பட வில்லை. எனவே தேர்வு செய்யப்பட்டுள்ள உடற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- இறப்புச் செய்தி
No comments:
Post a Comment