சுமார் 4 மில்லியன் ரியால்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ரியாத் காவல்துறையினர் சிறப்பாகச் செயற்பட்டு அறுவர் கொண்ட கொள்ளைக்கும்பலை கைது செய்துள்ளனர். இதில் ஐவர் ஆசிய நாட்டவர் என்றும் மற்ற ஒருவர் மண்ணின் மைந்தர் என்றும் தெரிய வந்துள்ளது
ரியாத் நிறுவனமொன்று வங்கியில் செலுத்த பணம் கொண்டு சென்றபோது, அந்த வாகனத்தை வழிமறித்த கொள்ளையர்கள் அதிலிருந்த ச.ரி 40 இலட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளர். வழிமறிக்க உதவியாக அவர்கள் கொண்டு வந்த வாகனமும் திருடப்பட்ட ஒன்று என்றும், சம்பவத்திற்குப் பிறகு, தடயத்தை அழிக்கும் முயற்சியில் அந்த வாகனத்தையும் திருடர்கள் தீவைத்து எரிக்க முயன்றனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
இது குறித்து நிருபர்களிடம் பேசிய ரியாத் நகர காவல்துறை மக்கள் தொடர்பாளர் சயீத் அல் கஹ்த்தானி, கொள்ளையர்களின் வசிப்பிடத்தை காவல்துறை ஆறுமணிநேரம் சோதனை செய்ததில் சுமார் 37 இலட்சம் ரியால்கள் மீட்கப்பட்டதாகவும், இஃதன்றி கைபேசிகள், கடவுச்சீட்டுகள், முத்திரைகள், இராணுவச் சீருடைகள், ச.ரி 6,000க்கான காசோலை ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
மேலும் அவர் தெரிவிக்கையில் "கொள்ளையடிக்கப்பட்டோர் முழுமையான விபரங்களைத் தராவிட்டாலும், காவல்துறை சிறப்பாகச் செயற்பட்டு பத்தே நாள்களில் இக்குற்றத்தை முறியடித்துள்ளது" என்றார்.
Source: inneram.com
October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment