கடலூர் : பஸ் நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டிக்கு டீ வாங்கிக் கொடுத்து ஒன்பதரை சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி உண்ணாமலை (75). இவர் கடந்த 14ம் தேதி காலை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு ஊருக் குச் செல்ல பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், உண்ணாமலையிடம் நான் உங்களது உறவினர் எனக் கூறி அவரை ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று புடவை வாங்கிக் கொடுத்தார். பின்னர் டீ வாங்கிக் கொடுத்தார்.
அதனைக் குடித்த உண்ணாமலை சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். கண்
விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், 4 சவரன் வளையல், ஒரு சவரன் தோடு, மற்றும் அரை சவரன் மோதிரம் என மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பதரை சரவன் நகைகள் காணவில்லை. அவருக்கு புடவை வாங்கிக் கொடுத்த பெண்ணையும் காணவில்லை. டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நகைகளை திருடிச் சென்றிருப்பது அறிந்த அவர் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Source: Dinamalar
October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- நூலகத்திற்கு வேலைவாய்ப்பு:விண்ணப்பங்கள் வரவேற்பு
- ரத்த சோகையை விரட்டியடிக்கும் சாத்துக்குடி
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- லயோலா கல்லூரி சர்வே. அதிமுக அமோக வெற்றி
- குப்பைமேடுகளாகி வரும் கடலூர் நகராட்சி
- சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அப்துல் அஸீஸ் மரணம்.
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது
- அபுதாபி தாஸ் தீவில் ஆன் ஷோரில் பொறியியல் வேலைகள்
Nalla yosikirangapaa....!
ReplyDelete