Islamic Widget

August 19, 2010

புனித ரமளான்.மதீனா இப்தர்

ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். என்று அழைக்கப்படுவார்.
தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகை வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள். அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாக இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் என்றார்கள் (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) புகாரி 1897)






இஸ்மாயில்
மதீனா
சவூதி

No comments:

Post a Comment