சிதம்பரம் : துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது ஏற்பட்ட தகராறில் இருவரைத் தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் அலி (26). இவர் கடந்த 20ம் தேதி சிதம்பரத் தில் நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென் றார். அங்கு வந்த அனந் தீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம், ஹரிஹரன், குமார், பூங்காமுத்து ஆகியோர் ஜாபர் அலியிடம் தகராறு செய்து தாக்கினர். தடுக்க வந்த அவரது நண்பர் ஜான் பாஷாவையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை தேடி வருகின்றனர்.
source: dinamalar
No comments:
Post a Comment