ரேஷன் கார்டுகளை உடனுக்குடன் அச்சிட்டு வழங்க எல்காட் நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் காலதாமதம்
ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. மாவட்ட வழங்கல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல, ரேஷன் கார்டுகளை அச்சிடும் எல்காட் நிறுவனத்தில் அச்சிடாமல், முடங்கிக்கிடப்பதாக புகார்கள் கூறப்பட்டன.
இது தொடர்பாக உணவுப் பொருள்கள் வழங்குதுறை மற்றும் எல்காட் நிறுவனப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ரேஷன் கார்டுகளை எல்காட் நிறுவனம் உடனுக்குடன் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். வாரம் தோறும் இப்பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
அந்தந்த வாரம் அச்சிடப்படும் ரேஷன் கார்டுகள், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment