Islamic Widget

March 01, 2012

காவலர் மீது கத்திக்குத்து: கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!


கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் காவலர்கள் யோகானந்தம், பாஸ்கர் ஆகியோர் வழக்கம் போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை சோதனையிட முயன்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இருசக்கரவாகனத்தில் வந்த ஒருவர் திடீரென பாஸ்கர் மீது கத்தியால் குத்தினார். பின்னர் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.  மர்ம நபர்கள் இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

மர்ம நபர்களால் காவலர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்ட காவலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment