Islamic Widget

March 01, 2012

கடையநல்லூர் இளைஞர் திருச்சி அருகே விபத்தில் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர்  கல்பத் நாயகம் தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மணல்மேல் குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றும் இவர் குடும்பத்துடன் இலுப்பூரில் தங்கி இருக்கிறார். 


இவரது மகன் அன்வர் அலி , அவரது நண்பர் கடையநல்லூர் அப்துல் பாசித் இருவரும் கடவுச்சீட்டு விண்ணப்பிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சி வந்தனர்.

கடவுச்சீட்டு  அலுவலக பணிகளை முடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் அன்வர் அலியும், அப்துல் பாசித்தும் இலுப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.


திருச்சி- மதுரை மெயின்ரோட்டில் சென்றபோது அவர்களது  இரு சக்கர வாகனம் மீது ஒரு கனரக வாகனம் மோதியது. இதனால்  பலத்த காயமடைந்த அவர்களை திருச்சி அரசு  மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனர்.  ஆனால் வரும்வழியிலேயே அன்வர் அலி  உயிரிழந்தார்.


பலத்த காயம் அடைந்த அப்துல் பாசித் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்து பற்றி விராலிமலை காவல்துறையினர்  விசாரணை  மேற்கொண்டு வருகிறார்கள்

No comments:

Post a Comment