Islamic Widget

October 17, 2011

அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம்பொதுமக்கள் வாக்குவாதம்



காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அருகே, அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் பொதுமக்கள் வாக்குவாதம் செ#ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடி கிராமத்தில், 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, அமைச்சர் செல்வி ராமஜெயம் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் திடீரென, "முட்டத்தில் இருந்து ஆயங்குடி வழியாக சென்னை சென்ற அரசு பஸ் தற்போது இயங்கவில்லை' என, அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் முறையிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.பஸ் இயங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்து மீண்டும் பிரசாரத்தை தொடர்ந்தார்.
ஆனால், தொடர்ந்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் டென்ஷனான அமைச்சர், பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

No comments:

Post a Comment