Islamic Widget

August 08, 2010

ஏர்போர்ட்டில் பார்வையாளர்களுக்கு தடை


சென்னை :சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்குள் பார்வையாளர் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.நாட்டின் முக்கிய விழா நாட்களில் தாக்குதல் நடத்துவதை பயங்கரவாதிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால், குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எந்த நேரமும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்திற்கு முக்கிய நாட்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.இந்த வகையில், வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் சென்னை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
source: dinamalar

No comments:

Post a Comment