கடலூர்:போலியோ சொட்டு மருந்து
முகாமிற்கான அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர்
தலைமையில் நடந்தது.நாடு முழுவதும் வரும் ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24ம் தேதிகளில்
போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. அந்த பணியை கடலூர் மாவட்டத்தில்
சிறப்பாக செய்திடும் பொருட்டு அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப் புக்குழுக்
கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு
தலைமை தாங்கிய
கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசுகையில், போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி கடந்த
95ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன காரணமாக கடந்த 2004ம் ஆண்டிற்கு
பிறகு தமிழகத்தில் இளம்பிள்ளை வாத நோய் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்
நடவடிக்கையால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நமது நாட்டில் இளம்பிள்ளை வாத நோய்
ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ் பெற வாய்ப்பு அமையும்.
இதற்கு அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு அவசியம். போலியோ சொட்டு மருந்து
முகாமிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிற துறை வாகனங்களையும், ஊழியர்களையும் உரிய
நேரத்தில் விடுவிக்க வேண்டும்.அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் முகாம்
நடைபெறும் நாள் மட்டுமல்லாது, அடுத்தடுத்த நாட்களில் வீடு, வீடாக சென்று விடுபட்ட
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வேண்டும். சொட்டு மருந்தினை குறிப்பிட்ட
குளிர்ச்சியில் வைத்திருக்க முகாம் நடைபெறுவதற்கு முதல் நாள் முதல் மூன்று
நாட்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், நடைபெறவுள்ள போலியோ
சொட்டு மருந்து முகாம் குறித்து போதிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள
அறிவுறுத்தினார்.கூட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, வருவாய், கல்வி, உள்
ளாட்சி, ஊட்டச்சத்து, சமூக நலம், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள்
பங்கேற்றனர்.January 16, 2013
ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
No comments:
Post a Comment