ஜனகட்:குஜராத் முஸ்லிம்
இனப்படுகொலை புகழ் மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் பா.ஜ.கவின் மூத்த
தலைவர்களில் ஒருவரும், முன்னாள் குஜராத் முதல்வருமான கேசுபாய்பட்டேல். கட்ச்
பகுதியில் விவசாயிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார் கேசுபாய். அப்பொழுது அவர்,
“மோடி, ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லருக்கு ஒப்பானவர். ஏகாதிபதியைப் போல மோடி
குஜராத்தை ஆட்சி புரிகிறார். குஜராத்தில்ஒரு மினி நெருக்கடி நிலை அமலில் உள்ளது.”
என்று
குறிப்பிட்டார்.
குஜராத் பா.ஜ.கவில் உட்கட்சிப்
போர் முற்றிப் போனதன் அடையாளம் தான் கேசுபாயின் பகிரங்க குற்றச்சாட்டாகும். இதற்கு
முன்னரும் கேசுபாய் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு
வந்தார்.
No comments:
Post a Comment