பரங்கிப்பேட்டை: அரேபிய நாடுகளுள் ஒன்றான ஓமன் நாட்டுக்கு, கட்டுமானப் பணி செய்யச் சென்ற பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சகோதரர் ஒருவர் மாயமாகிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி, தனது கணவர் பற்றிய செய்தியை அறிந்து தெரிவிக்கும்படி பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வாயிலாக ஓமனிலுள்ள தமிழர்களையும், தமிழர் அமைப்புகளையும் மிகவும் கேட்டுக்கொண்டுள்ளார்.பரங்கிப்பேட்டையை சாலக்கரை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவரான இமாம் ஹூசைனுக்கு மனைவியும் மூன்று மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். ஓமனில் கட்டிட வேலை பார்க்க கடந்த 2010ம் ஆண்டு சென்ற இமாம் ஹுசைன் பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் எந்தத் தகவலும் கிடைக்காமல் அவருடைய குடும்பத்தினர் அல்லலுறுகின்றனர்.
இமாம் ஹூசைனுடைய மனைவி ஜஹ்ரா பீவி தன் கணவர் குறித்த தகவல்களை அறிந்து அளித்துதவும் படி இந்திய வெளியுறவுத் துறைக்கு மனுச் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் மருத்துவர் நூர்முஹம்மது மூலமாக இந்திய வெளியுறவுத்துறையின் கவனம் ஈர்க்கப்பட்டு இருப்பதாக பரங்கிப்பேட்டை குழுமச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இமாம் ஹூசைன் பணிபுரிந்த இடத்தில் அவரது பொறியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக இமாம் ஹுசைனின் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இமாம் ஹுசைனுடன் ஓமன் சென்ற ரமேஷ் என்பவர் ஊர் திரும்பி விட்டார். இமாம் ஹுசைனை விடுதலை செய்து அனுப்ப அவருடய முதலாளி பணம் கேட்பதாக ரமேஷ் இமாம் ஹுசைனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். முழு விபரங்களும் ஓமனில் வசிக்கும் நபர்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும் என்றும் ரமேஷ் கூறியுள்ளார்.
நன்றி: mypno
இமாம் ஹூசைனுடைய மனைவி ஜஹ்ரா பீவி தன் கணவர் குறித்த தகவல்களை அறிந்து அளித்துதவும் படி இந்திய வெளியுறவுத் துறைக்கு மனுச் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் மருத்துவர் நூர்முஹம்மது மூலமாக இந்திய வெளியுறவுத்துறையின் கவனம் ஈர்க்கப்பட்டு இருப்பதாக பரங்கிப்பேட்டை குழுமச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இமாம் ஹூசைன் பணிபுரிந்த இடத்தில் அவரது பொறியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக இமாம் ஹுசைனின் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இமாம் ஹுசைனுடன் ஓமன் சென்ற ரமேஷ் என்பவர் ஊர் திரும்பி விட்டார். இமாம் ஹுசைனை விடுதலை செய்து அனுப்ப அவருடய முதலாளி பணம் கேட்பதாக ரமேஷ் இமாம் ஹுசைனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். முழு விபரங்களும் ஓமனில் வசிக்கும் நபர்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும் என்றும் ரமேஷ் கூறியுள்ளார்.
நன்றி: mypno
No comments:
Post a Comment