கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த
பிறகும் கோடை வெயில் குறையவில்லை. பருவ மழையும் திருப்தியளிக்கும் வகையில்
பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வந்தது. கடலூரில் நேற்று பகலில் வழக்கம்போல் “சுள்”
என வெயிலடித்தது. இதனால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் இரவு 7
மணி முதல் 10 மணி வரை இடி - மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இரவில் சுமார் 1/2 மணி நேரம் மழை பெய்தது. மவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இரவில் சுமார் 1/2 மணி நேரம் மழை பெய்தது. மவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
No comments:
Post a Comment