பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலுர் மாவட்ட இசுலாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை வன்னியர்பாளையம் செட்டித்தெருவில் கடந்த 19ம் தேதி நான்கு கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலுர் மாவட்ட இசுலாமிய ஐக்கிய ஜமா அத் மற்றும் அரிமா சங்கம் சார்பில் வீடு கட்ட 2,000 கீற்றுகள், சேலைகள், கைலிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
நிவாரண உதவிகளை பேரூராட்சித் தலைவர் முகமது யூனுஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான், பேரரூராட்சி துணைத் தலைவர் நடராஜன், அரிமா வட்டாரத் தலைவர் ராதாகிருஷ்ணன், கணேஷ், கவுன்சிலர்கள் சிவவடிவேல், பொற்செல்வி, கணேசன், முருகன் பங்கேற்றனர்.
நிவாரண உதவிகளை பேரூராட்சித் தலைவர் முகமது யூனுஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான், பேரரூராட்சி துணைத் தலைவர் நடராஜன், அரிமா வட்டாரத் தலைவர் ராதாகிருஷ்ணன், கணேஷ், கவுன்சிலர்கள் சிவவடிவேல், பொற்செல்வி, கணேசன், முருகன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment