Islamic Widget

June 07, 2012

சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது


சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சையளிப்பதாக ஏ.எஸ்.பி., துரைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலி டாக்டர்களை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். நகர சப் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சிதம்பரம் பகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர்.

பொன்னம்பலம் நகரைச்சேர்ந்த சரவணன் என்பவர் தனது வீட்டிற்குமுன்பு கிளினிக் நடத்தி வந்தார்.அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், டாக்டருக்கு படிக்காமலேயே பொது மக்களை ஏமாற்றி சிகிச்சையளித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர். சிதம்பரத்தில் போலி டாக்டரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு.......

    புதிய வரவுகள்:
    பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete