Islamic Widget

February 27, 2012

கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த 19ம் தேதி பெட்ரோல் பங்கில் 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை தீவிரமாக விசாரித்ததில், கடலூர் கடம்புலியூரைச் சேர்ந்த நடராஜன், ராமராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரகாஷ், திருச்சியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை கைது செயதுள்ளது. இக்கும்பலிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கி்ல் கொள்ளை சம்பவம் நடந்த போது, பொதுமக்கள் உதவியுடன் செல்வதிருமால் என்ற கொள்ளையரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

No comments:

Post a Comment