Islamic Widget

January 08, 2012

ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி தீவிரம்.!


தமிழக அரசின் சார்பில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப் பட இருக்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இன்னும் முடிவு பெறாததால் நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளை 2012 ஆம்ஆ ண்டுக்கு புதுப்பிக்கும் பணி தற்போது நியாய விலைக் கடைகளி ல் நடைபெற்று வருகிறது. 2012 ஆம் ஆண்டுக்கு குடும்ப அட் டைகளின் உள்தாளில் முத்திரையிட்டு, குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விற்பனை யாளர்களிடம் உரிய பதிலை தெரிவித்து, குடும்ப அட்டைகளில்
திருத்தம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், புதுப்பிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு மட்டும் அந்தந்த வாரம் சனிக்கிழமை தோறும் மண்ணெண்ணெய் வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணியில் குடும்ப அட்டைதாரர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, குடிமைப்பொருள் வழங்குவதில் ஏதேனும் தாமதம் மற்றும் இடர்பாடு ஏற்படின் பொறுமையுடன் இருந்து குடிமைப் பொருள்களை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று  கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மா. உமாமகேஸ்வரி நேற்று கரூரில் செய்தியாளார்களிடம் தெரிவித்தார்

No comments:

Post a Comment