Islamic Widget

December 31, 2011

பேட்டையில் வந்தது மின்சாரம்


புயலால் பாதிக்கப்பட்டுள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ள சூழ்நிலையில், இன்று இரவு 8.10 மணிக்கு, சஞ்சிவிராயர் கோயில் தெரு பகுதிகளில் மின் இணைப்பு சோதனை ஓட்டமாக வழங்கப்பட்டது. இதனால் சஞ்சிவிராயர் கோயில் தெரு மின்னொளியால் வெளிச்சம் பூண்டுள்ளது.
செய்தியாளரிடம் இது குறித்து தெரிவித்த மின்வாரிய அதிகாரிகள் திருச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி பகுதிகளிலிருந்து  ஊழியர்கள் நிவாரணப்பணிக்கு வருகை தந்திருப்பதாகவும், நாளை காலை முதல் படிப்படியாக வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

நன்றி:mypno

1 comment:

  1. சூடான செய்தி தரும் உங்கள் வலைப்பூ க்கு நன்றி !

    ReplyDelete