Islamic Widget

November 17, 2011

புற்றுநோயை முற்றிலும் அழிக்க மருந்து கண்டுபிடிப்பு!

அமெரிக்கா: உலகத்தையே பயமுறுத்தி வந்த புற்றுநோய்க்கு தற்போது அமெரிக்கவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு புற்று நோயை முற்றிலும் அழிக்க கூடிய வீரியமான மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

மனித குலத்தின் உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் சர்வதேச விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் இருந்தும் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு புற்று நோயை முற்றிலும் அழிக்க கூடிய வீரியமான மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
‘கேஜி 5’ என்றழைக்கப்படும் இந்த புற்றுநோய்க்கான மருந்து புற்று நோய் பாதித்துள்ள செல்களை முற்றிலும் அழிக்கும் வீரியம் கொண்டது. இந்த மருந்து புற்றுநோய் செல்களை தங்களை தாங்களே அழித்து கொள்ள தூண்டி அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இந்த மருந்து அடுத்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த மருந்து குறித்து விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் செரேஷ் கூறும்போது, இந்த புற்று நோய்க்கான மருந்து மருந்து மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட உள்ளது. இது மிக சிறிதளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும் புற்று நோயை முற்றிலும் குணமாக்கும் என்றார்.

No comments:

Post a Comment