Islamic Widget

November 27, 2011

சவூதியிலிருந்து 3 மில்லியன் வெளிநாட்டவ​ர் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்!



சவூதி அரேபியாவின் தொழிலாளர் நல அமைச்சகம், வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் 20 விழுக்காடு தான் இருக்கவேண்டும் என்ற உச்சவரம்பை நிர்ணயித்துள்ளதால், அடுத்த ஒருசில வருடங்களில் சவுதி அரேபியா 3 மில்லியன் வெளிநாட்டவர்களை படிப்படியாக திருப்பி அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் 8.42 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சவுதியின் மக்கள் தொகையை கணக்கிடும்போது (18.7 M) 31 விழுக்காடாகும். இந்த 31 விழுக்காடு, 20 விழுக்காடாக குறைக்கப்படும்போது 2.9 M வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
தகுதியுள்ள வளைகுடா நாட்டைச்சேர்ந்தவர்களை, கம்பெனிகள் வேலைக்கு அமர்த்துவதற்கு நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்ற GCC மாநாட்டில் தொழில் அமைச்சகர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சமீபத்தில் சவுதியின் தொழிலாளர் நல அமைச்சர் ஆதில் ஃபகீஹ் அவர்கள், Nitaqat என்ற புதிய திட்டத்தை உருவாக்கி சவுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமான வெலை வாய்புகளை உருவாக்கி அதிலே ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள் என்பது குற்ப்பிடத்தக்கது.
எற்கனவே வளைகுடா நாட்டில் நிலைகொண்டவர்களும், புதிதாக வளைகுடா நாடுகளுக்கு சென்று வேலை செய்யப்போகிறவர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment