பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஜன் சேத்னா யாத்திரையை, சமீபத்தில் பீகாரில் இருந்து துவக்கினார். ரதயாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ரதயாத்திரையின் இரண்டாம் கட்ட பயணத்தை, இன்று அவர் மதுரையில் இன்று துவக்குகிறார்.
தமிழகத்தில் அவரின் ரதயாத்திரை செல்லும் பாதையில், பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது, இதையடுத்து அவரது ரதயாத்திரை செல்லும் பயணப்பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமங்கலம் ஆலம்பட்டி வழியாக அவர் விருநகருக்கு செல்லாமல், திருமங்கலத்திற்கு முன் உள்ள நான்குவழிச்சாலை வழியாக அவர் விருதுநகருக்குச் செல்கிறார்.
காவல்துறை இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

No comments:
Post a Comment